ஆனந்த குரலுக்கு அறுபது வயது
ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள்
பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்.
அத்தனைப்பிறப்பிலும், உன் தேனிசை குரலால்
என் உள்ளத்தில் நிலைத்திட வேண்டுகிறேன்.
சங்கீதவானில் உன் தேன் குரல்மடியில்
மேகமாய் தவழ்ந்திட வேண்டுகிறேன்.
பாமலர்களின் மணத்தில் உன் மகரந்தக்குரலில்
மயங்கி நுகர்ந்திட வேண்டுகிறேன்.
இசையெனும் மழையில் உன் குரலெனும் சாரலில்
சிலிர்த்து நனைந்திட வேண்டுகிறேன்.
ஸ்வரங்களின் சிறகில், உன் க..ம..க.. குரலால்
கேட்டு பறந்திட வேண்டுகிறேன்.
ராகங்கள் மீட்டும் உன் சிருங்கார குரல் என்னை
தென்றலாய் வருடிட வேண்டுகிறேன்.
இயற்க்கை அளித்த இந்த சுகமான உணர்வுகளை
உன் குரலில் வழங்கிய இறைவனை
என்றென்றும் வணங்கிட வேண்டுகிறேன்.
அத்தனை பிறப்பிலும் உனக்கு
இத்தனை இனிய குரல் எனும் வரத்தை வாரி
வழங்கிட வாழ்த்தி வேண்டுகிறேன்.
கோவை ரவீ










05/23/06 @ 09:38